Friday, December 23, 2011

பொன் மொழிகள் சில..........

நான் அனைத்தையும் நேசிக்கிறேன். அதனால்தான் என்னால் அனைத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது - டால்ஸ்டாய்

எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது. -ஜேம்ஸ் ஆலன்.

மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன. -நபிகள் நாயகம்.

நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம். -அன்னை தெரசா.

இல்லறத்தாருக்கும் துறவறத்தாருக்கும் பிரம்மச்சாரியம் அவசியம். ஏனெனில் உடல் மீதான ஆசை ஒழிந்தாலன்றி ஆத்மானந்தம் கிடையாது. -ஸ்ரீசாரதாதேவி.

ஐம்பொறிகள் அடக்கி வாழும் பெரியோரிடம் இறைவன் உறவு கொண்டாடுவான். -வள்ளலார்

அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல். -ஜெபர்சன்.

நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது. நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது. நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது - கன்ஃபூஷியஸ்

சுடுகாட்டிற்கு அப்பாலும் நம்மை தொடர்ந்து வருகிற ஒரே நண்பன் நல்லொழுக்கம் மட்டுமே. மற்றவை யாவும் மரணத்துடன் முடிவன.
 -வள்ளலார்

No comments:

Post a Comment