Friday, December 23, 2011

சிந்தனைத்துளிகள் -டால்ஸ்டாய்


அறிவுரைகளைக் கேட்பதிலும் படிப்பதிலும் மட்டுமே காலத்தைச் செலவிடாமல் அவற்றைச் செயல்படுத்துவதிலும் காலத்தைத் திருப்புங்கள்.

கல்வியின் வேர்கள் கசப்பானவை. ஆனால் அதன் கனிகள் இனிப்பானவை.

பகைவனை அடக்குபவனைவிட ஆசைகளை அடக்கியவனே வீரன்.

நான் அனைத்தையும் நேசிக்கிறேன். அதனால்தான் என்னால் அனைத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது

படகைத் திருப்புவதற்கு உதவியாக இருப்பது சுக்கான். செயலைத் திருத்துவதற்கு உதவுவது எண்ணம்.

1 comment: