Sunday, March 4, 2012

யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி-இது வரை நீங்கள் சந்தித்திராத எதிரி

‘உண்மையைத் தேடிச் செல்லும் எந்த முயற்சியுமே நீங்கள் ஏற்கனவே இருந்து கொண்டிருக்கும் உங்களது இயற்கையான நிலையிலிருந்து உங்களை விலக்கி விடுகிறது.

உண்மை என்பது உங்களது முயற்சியினால் அடைவதோ,பெறுவதோ அல்லது நிறைவேறுவதோ கூடிய பொருள் அல்ல.அது தன்னைத் தானே வெளிப்படுத்த முடியாதபடிக்குச் செய்கின்ற தடைகளே நீங்கள் செய்கின்ற முயற்சிகள் எல்லாம்.
எப்போதும் நீங்கள் உங்கள் இயற்கையான நிலையில்தான் இருக்கிறீர்கள்.உண்மை தனக்கே உரித்தான வழியில் தன்னிச்சையாக வெளிப்படத் தடையாக இருப்பதே உங்களது தேடல்கள்தான்.அதனால்தான் தேடுதல் என்பதே தவறான திசையில்தான் இருக்க முடியும்!

நீங்கள் புனிதம்,பவித்ரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அனைத்துமே உங்கள் உணர்வில் படிந்திருக்கும் அசுத்தங்கள்.

அசுத்தம் என்ற வார்த்தை உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம்,இருந்தாலும் சொல்கிறேன் அவை அசுத்தங்களே.

உங்களால் எதுவுமே செய்ய முடியாது.உங்கள் கைகளில் எதுவுமே இல்லை.

இதை நான் உங்களுக்கு தர முடியாது.ஏனெனில் அது ஏற்கனவே உங்களிடம் இருக்கிறது.

உங்களிடம் உள்ள பொருளையே நீங்கள் தானம் கேட்பது தமாஷாக இருக்கிறது.

எவரிடமும் கேட்டுப் பெறுவதற்கு எந்தப் பொருளும் இல்லை.

என்னிடம் இருப்பதுதான் உங்களிடமும் இருக்கிறது.

நான் இருக்கும் இடத்தில்தான் நீங்களும் இருக்கிறீர்கள்.

No comments:

Post a Comment